திருத்தந்தை பிரான்சிஸ் - ஏழு இறையடியார்களை புனிதர் நிலைக்கு உயர்த்தும் பணிகளைத்
துவக்க அனுமதி
ஜூலை,09,2014. ஏழு இறையடியார்களின் புண்ணிய வாழ்வு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு, அவர்களை
புனிதர் நிலைக்கு உயர்த்தும் பணிகளைத் துவக்கும் அனுமதியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
ஜூலை 8, இச்செவ்வாயன்று வழங்கினார். புனிதர் நிலைக்குப் பரிந்துரைக்கும் திருப்பீடப்
பேராயத்தின் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை
இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் சந்தித்து, ஏழு இறையடியார்களின் பெயர்களைப் பரிந்துரைந்தபோது,
திருத்தந்தை இந்த அனுமதியை வழங்கினார். இத்தாலியில் 1916ம் ஆண்டு பிறந்து, 1983ம்
ஆண்டு இறைவனடி சேர்ந்த பொது நிலையினர் Marcello Candia, மற்றும் மூன்று அருள் பணியாளர்கள்,
மூன்று அருள் சகோதரிகள் என, ஏழு பேரை, புனிதர் நிலைக்கு உயர்த்தும் பணிகளைத் துவக்க திருத்தந்தை
அனுமதி வழங்கியுள்ளார். இந்த ஏழு இறையடியார்களில் மூவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள்,
இருவர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள், மற்றும், துருக்கி, போர்த்துக்கல், இஸ்பெயின்
ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்த ஏழு பேரில் மூவர் துறவு சபைகளை நிறுவியவர்கள்
என்பது குறிப்பிடத் தக்கது.