பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அமைக்கத் திட்டம்
ஜூலை,08,2014 பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை ஒன்றை அமைக்கும்
திட்டத்தை பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. இந்தக் காந்தி நினைவிடம் அடுத்த ஆண்டு
திறந்து வைக்கப்படும் என்று பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக்கும், நிதியமைச்சர்
ஜார்ஜ் ஆஸ்போர்னும் இச்செவ்வாயன்று தில்லியில் அறிவித்தனர். பிரித்தானிய வெளியுறவு
அமைச்சரும் நிதியமைச்சரும் வர்த்தக தூதுக்குழுவொன்றுக்கு தலைமை தாங்கி இந்தியா சென்றுள்ளனர். 'உலகின்
மிகப்பெரிய சனநாயகத்தின் தந்தையான மகாத்மா காந்தியின் உருவச் சிலை நாடாளுமன்றங்களின்
தாய் என்று வர்ணிக்கப்படும் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முகப்பில் அமைவது பொருத்தமானது'
என்று ஆஸ்போர்ன் கூறினார். பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் வின்ஸ்டன் சர்ச்சில்,
நெல்சன் மண்டேலா உள்ளிட்ட முன்னாள் பிரித்தானிய மற்றும் வெளிநாட்டு அரசத்தலைவர்களின்
உருவச் சிலைகள் அமைந்துள்ளன.