ஜூலை,07,2014. ஈராக்கின் வடபகுதியில் இடம்பெற்றுவரும் வன்முறை நடவடிக்கைகளால் அகதிகளாக
மாறியுள்ள இஸ்லாமிய மக்களுக்கு புகலிடமும் உணவுப்பொருட்களும் கொடுத்து காப்பாற்றிவருகிறது
அந்நாட்டின் கிர்குக் நகர் திருஅவை. இஸ்லாமிய மசூதிகளிலும் பள்ளிகளிலும் விளையாட்டு
மையங்களிலும் அடைக்கலம் தேடியுள்ள ஏறத்தாழ 500 குடும்பங்களுக்கு உணவு விநியோகத்தை மேற்கொண்டுவரும்
கல்தேய வழிபட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவை, தங்களின் அனைத்துப் பொருளாதார வளத்தையும்
இதற்கெனவே செலவழிப்பதாகவும் தெரிவித்தது. கடும் வெயிலால் துன்புறும் அகதி மக்களுக்கு
குளிர்சாதன வசதிகளைச் செய்துகொடுக்கவும் திட்டம் வைத்துள்ளதாக அறிவித்துள்ளது இத்திருஅவை.