இலங்கையில் காணாமல்போனவர்களுக்குப் பொறுப்பேற்று அவர்களை விடுவிக்க அரசு முயற்சிகளை மேற்கொள்ள
வேண்டும்
ஜூலை,07,2014. இலங்கையில் காணாமல்போனவர்களுக்குப் பொறுப்பேற்று அவர்களை விடுவிக்க முயற்சிகளை
மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது அந்நாட்டின் கிறிஸ்தவ
ஒருமைப்பாட்டு அமைப்பு. காணாமற்போனோரின் குடும்பங்களின் ஒருங்கிணைப்பு என்ற அமைப்புடன்
இணைந்து அமைதி ஊர்வலம் ஒன்றை மேற்கொண்ட இக்கிறிஸ்தவ அமைப்பு, மக்கள் தொடர்ந்து காணாமல்போவதற்கு
அரசே பொறுப்பேற்கவேண்டும் எனவும் கேட்டுள்ளது. இவ்வூர்வலத்தில் எண்ணற்ற பொதுமக்களும்,
அருட்பணியாளர்களும், அருள்சகோதரிகளும், சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டனர். இலங்கையில்
மக்களைக் கடத்தலும், சித்ரவதைப்படுத்தலும், சுரண்டலும் ஊழலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக
மாறியுள்ளதாக கவலையை வெளியிட்டார் கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு அமைப்பின் செயலர் அருள்சகோதரி
தீபா ஃபெர்னாண்டோ.