ஜூலை,05,2014. எரிபொருள் சிக்கனத்தை சிறப்பாக கடைப்பிடிக்கும் நிறுவனத்திற்கு ஜெர்மனியில்
உள்ள 'ஒமக்' என்ற நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் 'குளோபல் கிரீன்' விருது,
சென்னை பெரம்பூரில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையான, ஐ.சி.எப். (ICF) நிறுவனத்துக்கு
இவ்வெள்ளியன்று வழங்கப்பட்டது. இந்த ஆண்டிற்கான இவ்விருதை பெங்களூரில் உள்ள ஜெர்மனி
துாதரக அதிகாரிகள், ஐ.சி.எப். பொது மேலாளர் அசோக் கே அகர்வாலிடம் வழங்கினார். திருநெல்வேலி
மாவட்டத்தில், ஏழு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைத்துள்ள ஐ.சி.எப்., நிறுவனம்,
அதன் மின் உற்பத்தியின் மூலம், ஐ.சி.எப்., தொழிற்சாலை, நிர்வாகப் பிரிவு, குடியிருப்பு
ஆகிய பகுதிகளுக்கான மின் தேவையைப் பூர்த்திசெய்து கொள்கின்றது.