நைஜீரியாவில் நான்கு கிறிஸ்தவக் கோவில்கள் தீக்கிரையாகியுள்ளன
ஜீலை,01,2014. நைஜீரியாவில் தன் தாக்குதல்களை மீண்டும் துவக்கியுள்ள Boko Haram இஸ்லாம்
தீவிரவாதக்குழு, நான்கு கிறிஸ்தவக் கோவில்களைத் தீக்கிரையாக்கியுள்ளதுடன், கிராமங்களுக்குள்
புகுந்து மக்கள் பலரைச் சுட்டுக் கொன்றுள்ளது. கிறிஸ்தவர்களைக் கொன்றதுடன் அவர்களின்
வீடுகளையும் எரித்துள்ளது இக்குழு. இதுவரை குறைந்தபட்சம் 30 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும்,
காட்டுப்பகுதிகளில் வீசப்பட்ட உடல்களைத் தேடிவருவதாகவும் கிராம அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே,
நைஜீரியக் கிறிஸ்தவர்கள் மீதான இத்தாக்குதல்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும்,
இவைகளை தடுத்து நிறுத்தவும் இராணுவம் தயங்கிவருவதாக கிராமத்து மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.