2014-06-30 15:54:09

புலம்பெயர்ந்தோர் முகாம்களில் அடைக்கலம் தேடியுள்ள தென்சூடான் மக்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ளது


ஜூன்,30,2014. தென்சூடானின் உள்நாட்டு மோதல்களால் ஐ.நா. புலம்பெயர்ந்தோர் முகாம்களில் அடைக்கலம் தேடியுள்ள மக்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக தென்சூடான் நிவாரணப்பணிகளூக்கான ஐ.நா. அமைப்பாளர் தெரிவித்தார்.
தங்கள் வாழ்விடங்களை இழந்து நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்தோராகியுள்ள மக்களின் எண்ணிக்கை வடபகுதியின் எண்ணெய் வளம் மிக்க Bentiu நகரிலேயே அதிகமிருப்பதாக ஐ,நா. அதிகாரி ஹில்டே ஜான்சன் கூறினார்.
கடந்த டிசம்பர் மாதம் தென்சூடானில் மோதல்கள் துவங்கியதைத் தொடர்ந்து, இதுவரை 15 இலட்சத்திற்கும் மேலானோர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி புலம்பெயர்ந்தவர்களாக வாழ்கின்றனர் என்று ஐ.நா. நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : Misna








All the contents on this site are copyrighted ©.