ஜூன்,30,2014. இந்தோனேசியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான அண்மைகால தாக்குதல்களின் தொடர்ச்சியாக,
இஞ்ஞாயிறன்று Yogyakarta நகருக்கு அருகேயுள்ள Pugeran கத்தோலிக்கப் பங்குகோவில் தாக்கப்பட்டுள்ளது. 'அல்லாவே
உயர்ந்தவர்' என்ற கோஷங்களுடன் திருப்பலியின்போது உள்நுழைந்த முகமூடி அணிந்த குழு ஒன்று
தாக்குதலை நடத்தி, சிறு பொருட்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்களின் முக்கிய
மாதமான இரமதான் மாதத்தின் துவக்கத்தில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதும், இந்தோனேசியாவிலுள்ள
ஜாவா தீவின் Yogyakarta பகுதியில் அண்மைக்காலங்களில் சிறுபான்மை மதத்தவர் மீதான தாக்குதல்கள்
அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.