இந்தியாவில் பத்து இலட்சம் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள்
ஜூன்,28,2014. இந்தியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பள்ளிக்குச் செல்லாத
குழந்தைகளின் எண்ணிக்கை பத்து இலட்சத்துக்கு அதிகமாக உள்ளதாக யுனெஸ்கோ என்ற ஐ.நா.வின்
கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில், 6 வயதுக்கும்
11 வயதுக்கும் இடைப்பட்ட பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 5 கோடியே 80 இலட்சமாக
இருப்பதாகவும் யுனெஸ்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்றது. 2011ம் ஆண்டில்
இந்தியாவில் 14 இலட்சம் சிறார் பள்ளிக்குச் செல்லவில்லை எனவும், இவ்வெண்ணிக்கையைக் குறைப்பதற்கு
முயற்சி எடுத்த 17 நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனவும் யுனெஸ்கோ அறிக்கை மேலும் கூறுகின்றது. புருண்டி
ஏமன், கானா, நேபாளம், ருவாண்டா, இந்தியா, ஈரான், வியட்நாம் உள்ளிட்ட 17 நாடுகளில் பள்ளி
செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு கோடியே எழுபது இலட்சத்திலிருந்து
நாற்பது இலட்சமாக குறைந்துவி்ட்டதாக யுனெஸ்கோவி்ன் பொது இயக்குனர் ஐரினோ போகோவா தெரிவித்துள்ளார்.