ஜூன்,27,2014. உலக அளவில் வெளிநாடுகளில் நேரடியாகச் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் அதிகரித்திருப்பதாகவும்,
இது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் ஐ.நா. அறிக்கை
ஒன்று கூறுகிறது. UNCTAD என்ற ஐ.நா. வணிகம் மற்றும் வளர்ச்சி நிறுவனம் நடத்திய கருத்தரங்கில்,
உலக முதலீடுகள் அறிக்கை 2014 என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், 2013ம் ஆண்டில்
வெளிநாடுகளில் நேரடியாகச் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் 9 விழுக்காடு அதிகரித்து அது 14
ஆயிரத்து 500 கோடி டாலராக உயர்ந்தது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் 2014ம்
ஆண்டில் 16 ஆயிரம் கோடி டாலராகவும், 2015ம் ஆண்டில் 17 ஆயிரம் கோடி டாலராகவும், 2016ம்
ஆண்டில் 18 ஆயிரம் கோடி டாலராகவும் உயரும் என UNCTAD நிறுவனம் குறிப்பிட்டது. இந்தியா,
சீனா, சிலே, கொலம்பியா உட்பட இருபது வளரும் நாடுகளில் முதலீடுகள் அதிகமாகப் போடப்பட்டுள்ளன
என UNCTAD நிறுவன அறிக்கை தெரிவிக்கின்றது.