பிலிப்பைன்சில் 51வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு
ஜூன்,24,2014. “மகிமையின் நம்பிக்கையான இயேசு நம்மில் இருக்கின்றார்” என்ற தலைப்பில்
51வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு பிலிப்பைன்சில் 2016ம் ஆண்டு சனவரியில் நடைபெறும்
என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் தலைப்பு பற்றி நிருபர் கூட்டத்தில் விளக்கிய
மனிலா கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே அவர்கள், நாம் ஒரேயொரு மனிதரில் நம்பிக்கை வைக்கிறோம்,
நாம் இறைவனில் நம்பிக்கை வைக்கிறோம் எனக் கூறினார். பிலிப்பைன்சின் செபு நகரில் 2016ம்
ஆண்டு சனவரி 24 முதல் 31 வரை நடைபெறும் 51வது அனைத்துலக திருநற்கருணை மாநாட்டில், பன்னாட்டு
மற்றும் தேசிய பிரதிநிதிகள் என, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது. பிலிப்பைன்சில் ஏற்கனவே ஓர் அனைத்துலக திருநற்கருணை மாநாடு
நடைபெற்றுள்ளது. இது, அந்நாட்டின் மனிலாவில் 1937ம் ஆண்டில் நடைபெற்றது.