பெர்லினில் ஒரே கூரையின்கீழ் மூன்று மதங்களுக்குரிய வழிபாட்டுத் தலங்கள்
ஜூன்,23,2014. யூதம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மூன்று மதங்களுக்கும் ஒரே இடத்தில் வழிபாட்டுத்
தலங்களை அமைப்பதற்கு ஜெர்மனியின் பெர்லின் மாநகராட்சி திட்டமிட்டு வருகின்றது. ஒரே
கூரையின்கீழ் ஒரு யூதமதத் தொழுகைக்கூடம், ஒரு மசூதி, ஒரு கிறிஸ்தவ ஆலயம் ஆகியவற்றை அமைக்கவும்,
இது, ஒரு வீடு என அழைக்கப்படும் எனவும் கூறியுள்ள பெர்லின் மாநகராட்சி, இம்மூன்று மதத்தினரும்
தாங்கள் வழிபடுவதற்கென தங்களுக்குரிய வழிபாட்டுத் தலங்களை ஒன்றிணைந்து கட்டுவார்கள் எனக்
கூறியுள்ளது. இவ்விடம் எழுப்பப்படுவதற்கான வரைபடம் குறித்து போட்டி வைக்கப்பட்டு வெற்றிபெறும்
கட்டட அமைப்பு தேர்ந்தெடுக்கப்படும் எனவும் பிபிசி ஊடகச் செய்தி கூறுகிறது.