2014-06-21 15:28:21

குற்றக்கும்பல்களால் நடத்தப்படும் வன்முறைகள் இனி ஒருபோதும் வேண்டாம், திருத்தந்தை


ஜூன் 21,2014. Cassano all'Ionio நகரில் மாஃபியா குற்றக் கும்பலால் கொலை செய்யப்பட்ட Coco என்ற 3 வயது சிறுவனுக்கு நேர்ந்ததுபோன்று சமுதாயத்தில் இனி எவருக்கும் இடம்பெறக் கூடாது என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினரைச் சந்தித்தபோது இவ்வாறு விண்ணப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திட்டமிட்டக் குற்றக் கும்பல்களால் நடத்தப்படும் வன்முறைகளை வன்மையாய்க் கண்டித்தார்.
மேலும், சிறுவன் Coco மற்றும் அவனின் பெற்றோருக்காகத் திருத்தந்தை செபிப்பதாக அந்நகர் ஆயர் Nunzio Galantino தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.