நேர்காணல் – புதிய இந்திய அரசும், கிறிஸ்தவர்களின் எதிர்பார்ப்பும்
ஜூன்,19,2014. இன்றைய நமது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இயேசு சபை அருள்பணி எல்.செபஸ்திராஜ்
சே.ச. அவர்கள் மதுரை இயேசு சபை மாநிலத் தலைவர். இவர் டில்லி இயேசு சபையினர் சமூக நிறுவனம்,
இந்திய ஆயர் பேரவையின் நிஷ்காட் ஊடகவியல் பயிற்சி நிறுவனம் போன்றவற்றின் இயக்குனர் உட்பட
பல முக்கிய பணிகளைச் செய்திருப்பவர். இந்தியாவில் பிஜேபி கட்சித் தலைமையில் புதிய அரசு
பணியைத் தொடங்கியுள்ள இவ்வேளையில், இந்த அரசிடமிருந்து கிறிஸ்தவர்கள் எதிர்பார்ப்பது
என்னவென அ.பணி எல்.செபஸ்திராஜ் சே.ச அவர்களைக் கேட்டோம்.