2014-06-19 15:43:54

திருத்தந்தையின் Twitter செய்தி - நம்பிக்கை இழப்பதற்கு நம்மிடம் ஒரு காரணமும் இல்லை


ஜூன்,19,2014. "உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று இயேசு கூறியுள்ளார். எனவே நம்பிக்கை இழப்பதற்கு நம்மிடம் ஒரு காரணமும் இல்லை என்ற செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் Twitter பக்கத்தில் இவ்வியாழனன்று வெளியிட்டார்.
மேலும், இவ்வியாழனன்று வத்திக்கானில் கொண்டாடப்படும் கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழாவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகர் புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் மாலை 7 மணிக்கு திருப்பலி நிறைவேற்றுகிறார்.
திருப்பலிக்குப் பின், புனித ஜான் லாத்தரன் பசிலிக்காவிலிருந்து துவங்கும் திரு நற்கருணை பவனி, அருகிலிருக்கும் புனித மேரி மேஜர் பசிலிக்காவில் நிறைவடைகிறது. பவனியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வழங்கும் நற்கருணை ஆசீரோடு இவ்விழா நிறைவடைகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.