2014-06-13 15:49:52

ஊட்டச்சத்து குறித்த அனைத்துலக கருத்தரங்கில் திருத்தந்தை பங்கேற்பு


ஜூன்,13,2014. வருகிற நவம்பர் 19 முதல் 21 வரை உரோம் நகரில் நடைபெறவுள்ள ஊட்டச்சத்து குறித்த அனைத்துலக கருத்தரங்குக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்வார் என அறிவித்தார் FAO இயக்குனர் José Graziano da Silva.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பங்கேற்பு குறித்து நிருபர் கூட்டத்தில் விளக்கிய FAO எனும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவன இயக்குனர் Graziano da Silva அவர்கள், வருகிற நவம்பர் 20ம் தேதியன்று திருத்தந்தையின் பங்கேற்பு இருக்கும் என்று தெரிவித்தார்.
2011ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டுவரை உலகில் ஏறக்குறைய 84 கோடியே 20 இலட்சம் பேர் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை எதிர்கொண்டனர். இவர்களில் 69 இலட்சம் சிறார் ஊட்டச்சத்துப் பற்றாக்குறைவால் இறந்தனர் மற்றும் 9 கோடியே 90 இலட்சம் சிறார் எடை குறைவான நிலையில் உளளனர் என FAO நிறுவன அறிக்கை கூறுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.