2014-06-12 16:03:45

ஈராக் மக்கள் அனைவருக்கும் மன உறுதியை வழங்க தான் சிறப்பாக செபிப்பதாக, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை


ஜூன்,12,2014. ஈராக் நாட்டை பிளவுபடுத்தாமல், ஒருங்கிணைக்கும் எண்ணம் கொண்டோர் இணைந்து, அரசை உருவாக்கினால், இந்த நாட்டை பேரழிவிலிருந்து காப்பாற்றலாம் என்று பாபிலோன் கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை முதலாம் Luis Raphael Sako அவர்கள் கூறினார்.
ஈராக் நாட்டில் Mosul நகரைக் கைப்பற்றியுள்ள புரட்சிக் குழுவினர், தற்போது, Kirkuk நகரையும் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சூழலில், Fides செய்திக்கு அளித்த பேட்டியில் முதுபெரும் தந்தை, நாட்டைக் குறித்து தன் கவலையை வெளியிட்டுள்ளார்.
Mosul நகரை புரட்சிக் குழுவினர் கைப்பற்றியுள்ளதைக் குறித்து, கவலை வெளியிட்ட முதுபெரும் தந்தை Sako அவர்கள், பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள நினிவே என்ற பழைமைச் சிறப்பு மிக்க நகர் அருகில் இருப்பதைச் சிறப்பாகக் குறிப்பிட்டார்.
அனைத்து அமைதிக்கும் ஊற்றான இறைவன், இந்த நெருக்கடி நேரத்தில், ஈராக் மக்கள் அனைவருக்கும் மன உறுதியை வழங்க தான் சிறப்பாக செபிப்பதாகக் கூறியுள்ளார் பாபிலோன் கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை முதலாம் Sako அவர்கள்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.