பாலியல் வன்முறைக்குப் பலியாகும் அனைவருக்காகவும் செபிக்குமாறு திருத்தந்தை வேண்டுகோள்
ஜூன்,10,2014. போர்க் காலங்களில் இடம்பெறும் பாலியல் வன்முறைக்குப் பலியாகும் அனைவருக்காகவும்
செபிக்குமாறு கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். @Pontifex என்ற தனது டுவிட்டர்
பக்கத்தில் இச்செவ்வாயன்று செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர்களின்போது
பாலியல் வன்முறைக்குப் பலியாகுவோர் மற்றும் இக்குற்றத்தை ஒழிப்பதற்கு உழைப்போருக்காகச்
செபிக்குமாறு விண்ணப்பித்துள்ளார். இக்குற்றத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கைகளில் இறங்குவதற்கு
இதுவே நேரம் என்றும் தனது டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். போர்களின்போது
பாலியல் வன்முறைகள் நடப்பதை தடுக்கும் நோக்குடன் ஜூன் 10, இச்செவ்வாயன்று இலண்டனில் தொடங்கியுள்ள
உலகளாவிய மாநாட்டை கருத்தில்கொண்டு தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ்.