நைஜீரியத் தலத்திருஅவை ஆறு மாதங்கள் செப முயற்சியில் ஈடுபட அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு
ஜூன்,09,2014. இதற்கிடையே, வருகிற ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் முடிய, நைஜீரியத்
தலத்திருஅவை ஆறு மாதங்கள் செப முயற்சியில் ஈடுபட அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஒவ்வொரு
மாதத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கருத்தை முன்வைத்து, குடும்பங்களிலும், பங்குத் தளங்களிலும்
செபமாலை மற்றும் ஏனைய ஆராதனை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர். நைஜீரியாவில்
கடத்தப்பட்டுள்ள இளம் சிறுமிகளின் விடுதலையை ஜூலை மாத செபக் கருத்தாகவும், வன்முறைகளால்
துன்புறும் அனைவருக்காகவும் செபிப்பது ஆகஸ்ட் மாதக் கருத்தாகவும், ஆயர்கள், ஒவ்வொரு மாதத்திற்கும்
ஒரு குறிப்பிட்ட கருத்தை முன்வைத்துள்ளனர். இல்லங்களில் மேற்கொள்ளப்படும் செபமாலை,
பங்குத் தளங்களிலும், மறைமாவட்ட அளவிலும் ஒவ்வொரு மாத இறுதி சனிக்கிழமை மேற்கொள்ளப்படும்
நற்கருணை ஆராதனை ஆகிய முயற்சிகள், நவம்பர் மாதம் 13, 14 ஆகிய நாட்களில் நாடு முழுவதும்
மேற்கொள்ளும் ஒரு புனித நடைப்பயணத்தில் நிறைவுறும் என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.