2014-06-07 15:18:27

திருத்தந்தை பிரான்சிஸ் : மத்திய கிழக்கிலும் உலகிலும் அமைதி ஏற்படுவதற்குச் செபத்தைப் பயன்படுத்துவோம்


ஜூன்,07,2014. செபம் மிகுந்த வல்லமை வாய்ந்தது; மத்திய கிழக்கிலும் உலகிலும் அமைதியைக் கொணருவதற்குச் செபத்தைப் பயன்படுத்துவோம்; அமைதிக்காகச் செபிப்போம் என, இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், தூய ஆவிப் பெருவிழாவாகிய இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்னும், இத்தாலிய விளையாட்டு அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் எழுபதாம் ஆண்டை முன்னிட்டு, வத்திக்கான் பசிலிக்காப் பேராலயத்துக்கு முன் அமைந்துள்ள கொன்சீலியாட்சியோனே சாலையில், இந்த அமைப்பு நடத்தும் விளையாட்டு விழாவில் கலந்துகொள்ளும் ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களை இச்சனிக்கிழமை மாலை 5 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலிய விளையாட்டு அமைப்பு, இத்தாலிய கத்தோலிக்கக் கழகத்தின் இளையோர்ல் 1944ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி









All the contents on this site are copyrighted ©.