த வாய்ஸ் இத்தாலி தொலைக்காட்சி பாடகர் போட்டியில் கத்தோலிக்க அருள்சகோதரி வெற்றி
ஜூன்,07,2014. உலகத் தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியான, த வாய்ஸ் பாடகர் போட்டியின் இத்தாலிய
வடிவ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் 25 வயது கத்தோலிக்க அருள்சகோதரி ஒருவர் வெற்றிபெற்றுள்ளார்.
திருக்குடும்பத்தின் ஊர்சுலைன் சகோதரிகள் சபையைச் சேர்ந்த அருள்சகோதரி Cristina Scuccia
அவர்கள், 2014ம் ஆண்டுக்கான தொலைக்காட்சி பாடகர் போட்டியில் 62 விழுக்காடு வாக்குகள்
பெற்று வெற்றிபெற்றுள்ளார். இந்தப் போட்டியில் கலந்துகொண்டது குறித்துப் பேசிய அருள்சகோதரி
கிறிஸ்தீனா, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதுபோன்று, இயேசுவை இங்கு அறிவிக்க விரும்புவதாகத்
தெரிவித்தார். மேலும், அந்நிகழ்வில் கலந்துகொண்ட இலட்சக்கணக்கான மக்கள் அனைவரும் இணைந்து,
விண்ணகத்தில் இருக்கின்ற எங்கள் தந்தையே என்ற செபத்தைச் செபிக்கவும் வைத்தார் அருள்சகோதரி
கிறிஸ்தீனா. தான் இந்தப் போட்டியில் கலந்துகொண்டது தனக்காக அல்ல, இறைவனுக்காக என்று
சொல்லி, தனது வெற்றிக்காக இறைவனுக்கு நன்றியும் தெரிவித்தார் அருள்சகோதரி கிறிஸ்தீனா.
இவர் முதன்முதலாக இந்தப் போட்டிக்குத் தெரிவாவதற்காகப் பாடிய பாடல் (Alicia Key-
இன் No One என்ற பாடல்) யூடியூப் இணையதளத்தில் ஏற்கனவே 50 மிலியன் தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.