2014-06-06 15:42:05

திருத்தந்தை பிரான்சிஸ் - செபத்திலும் செயலிலும் அமைதியின் மக்களாக இருப்போம்


ஜூன்,06,2014. அமைதி இறைவனின் கொடை. ஆயினும், இதற்கு நமது முயற்சிகள் தேவை. செபத்திலும் செயலிலும் அமைதியின் மக்களாக இருப்போம். அமைதிக்காகச் செபிப்போம் என, இவ்வெள்ளியன்று தனது டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், சிங்கப்பூரின் ஜோசப் யுவராஜ் பிள்ளை உட்பட நான்கு சிறந்த வல்லுனர்களை, வத்திக்கானின் நிதி சார்ந்த தகவல் குழுவுக்கு நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கானின் நிதி அமைப்பில் ஒளிவுமறைவற்ற நிலையை உருவாக்குவதற்கென திருத்தந்தை நியமித்துள்ள புதிய குழுவில், சுவிட்சர்லாந்தின் Marc Odendall, சிங்கப்பூரின் ஜோசப் யுவராஜ் பிள்ளை, Harvard சட்டக்கல்விப் பேராசிரியர் Juan Zarate, இத்தாலியின் Maria Bianca Farina ஆகியோர் உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.