2014-06-02 20:04:37

அகில உலக அருங்கொடை இயக்கத்தின் 37வது மாநாட்டில் திருத்தந்தை ஆற்றிய உரை


ஜூன்,02,2014. இஞ்ஞாயிறன்று, உரோமை நகரில் அமைந்துள்ள ஒலிம்பிக் விளையாட்டுத்திடலில் நடைபெற்ற அகில உலக அருங்கொடை இயக்கத்தின் 37வது மாநாட்டில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "நற்செய்தி அறிவிப்பு, ஆண்மீக ஒன்றிப்பு, தேவையில் இருப்போரை பராமரித்தல், மற்றும் விளிம்பில் இருப்போரை வரவேற்றல் ஆகிய பண்புகள் அருங்கொடை இயக்கத்தின் உறுப்பினர்கள் வெளிபடுத்த வேண்டிய பண்புகள்" என்று கூறினார்.
50,000க்கும் அதிகமாக அவ்விளையாட்டுத்திடலில் கூடியிருந்தோரிடம், அருங்கொடை இயக்கம், இறைவனிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட கொடை என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
அருங்கொடை இயக்கத்தின் உயிர் நாடியாக விளங்கவேண்டியது, ஆண்டவர் முன் நாம் மேற்கொள்ளும் ஆராதனை என்பதையும் வலியுறுத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2017ம் ஆண்டு, அருங்கொடை இயக்கத்தின் ஜுபிலி விழாவை வத்திக்கானில் கொண்டாட அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.