2014-05-30 16:29:40

அகில உலக அருங்கொடை இயக்க மாநாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் கலந்துகொள்வார்


மே,30,2014. உரோம் நகரில் ஜூன் 1,2 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் அகில உலக அருங்கொடை இயக்கத்தின் மாநாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற ஞாயிறு, திங்கள் ஆகிய இருநாட்கள் நடைபெறும் 37வது அகில உலக அருங்கொடை இயக்க மாநாட்டில், 50 நாடுகளிலிருந்து 50,000த்திற்கும் அதிகமானோர் கலந்துகொள்கின்றனர்.
ஞாயிறு காலை, 10.30 மணியளவில் உரோம் நகரின் ஒலிம்பிக் விளையாட்டுத் திடலில் ஆரம்பமாகும் இந்த மாநாட்டில், மாலை 5 மணியளவில் திருத்தந்தை கலந்து கொள்கிறார்.
இந்த மாநாட்டில், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் தலைமை அருள் பணியாளர், கர்தினால் Angelo Comastri, மற்றும் பொதுநிலையினர் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Stanislaw Rylko ஆகியோர் உட்பட, பல ஆயர்கள் கலந்துகொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில உலக அருங்கொடை இயக்க மாநாட்டில் திருத்தந்தை ஒருவர் கலந்துகொள்வது இதுவே வரலாற்றில் முதல் முறை என்று Zenit கத்தோலிக்கச் செய்தி கூறியது.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.