பிரதமருக்கும் ஏனைய அமைச்சர்களுக்கும் இந்தியத் திருஅவையின் செபங்களை உறுதி கூறுகிறோம்
- கர்தினால் Gracias
மே,28,2014. சமுதாய, மற்றும் பொருளாதார நீதிக்கென உழைக்கும் இந்தியக் கத்தோலிக்கத் திருஅவையின்
பணியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அவரது உடன் அமைச்சர்களும் இணைவர் என்ற நம்புவதாக
மும்பைக் கர்தினால் Oswald Gracias அவர்கள் கூறினார். இத்திங்களன்று பதவி வாக்குறுதிகளை
வழங்கிய பிரதமருக்கும் ஏனைய அமைச்சர்களுக்கும் இந்தியத் திருஅவையின் செபங்களை உறுதி கூறுகிறோம்
என்று கூறிய கர்தினால் Gracias அவர்கள், அனைத்து மக்களுக்கும் உழைக்கும் மனதையும், அறிவுத்
திறனையும் அனைவருக்கும் இறைவன் வழங்க செபிக்கிறோம் என்று எடுத்துரைத்தார். இந்தியக்
குடியரசு வரலாற்றில், பிரதமர் ஒருவரின் பதவியேற்பு நிகழ்வுக்கு, பாகிஸ்தான் பிரதமர் வந்திருப்பது
இதுவே முதல் முறை என்று கூறும் ஆசிய செய்தி நிறுவனம், பாகிஸ்தான் பிரதமர், Nawaz Sharif
அவர்கள், பிரதமர் மோடி அவர்களை தனியே சந்தித்து உரையாடினார் என்றும் கூறியுள்ளது. தான்
அமைதியின் செய்தியை இந்தியாவுக்கு எடுத்துச் செல்வதாக, பாகிஸ்தான் பிரதமர் Sharif அவர்கள்,
தன் பயணத்திற்கு முன் அறிவித்ததாக ஊடகங்கள் கூறியுள்ளன.