பெரும்பான்மை மக்களுக்கு நன்மை தரும் அரசின் செயல் திட்டங்களை தலத்திருஅவை ஆதரிக்கும்
- பாப்புவா நியூ கினி ஆயர்கள்
மே,23,2014. சமுதாயப்பணி, கல்வி, நலவாழ்வுத் திட்டங்கள் ஆகிய அனைத்திலும் பாப்புவா நியூ
கினி நாட்டு அரசுடன் ஆயர் பேரவை ஒன்றிணைந்து செயல்பட தயாராக இருப்பதாக, அந்நாட்டு ஆயர்கள்
அரசுக்கு ஒரு திறந்த மடல் அனுப்பியுள்ளனர். பெரும்பான்மை மக்களுக்கு நன்மை தரும் எந்த
ஒரு செயல் திட்டத்தையும் தலத்திருஅவை ஆதரிக்கும் என்று கூறியுள்ள ஆயர்களின் இம்மடலில்,
கருக்கலைப்புக்கு தங்கள் எதிர்ப்பை எப்போதும் வெளிப்படுத்துவோம் என்றும் கூறப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த
மக்களைக் கொண்ட ஒரு நாட்டில், நாட்டின் மக்கள் தொகை அரசின் பிரச்சனை அல்ல என்று கூறும்
ஆயர்களின் மடல், நாட்டில் நிலவும் ஊழல், அநீதிகள் ஆகியவை களையப்பட்டால், அனைவரும் மகிழ்வுடன்
வாழ வாய்ப்புண்டு என்று வலியுறுத்துகிறது.