மே 22,2014. 'நாம் கடவுளால் வழிநடத்தப்படுவோமானால், ஒருபோதும் மருட்சியடையமாட்டோம் மற்றும்
பாதையைத் தவறவிடவும் மாட்டோம்' என தன் டுவிட்டர் பக்கத்தில் இவ்வியாழனன்று எழுதியுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். இதே நாள் காலையில் இத்தாலியின் மிலான் பேராயர் கர்தினால்
Angelo Scola அவர்களையும், அதன் பின்னர், 'அத் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்துள்ள
மெக்சிகோ நாட்டு ஆயர்கள் குழுவின் 18 ஆயர்களையும் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்
திருத்தந்தை பிரான்சிஸ்.