மே 20,2014. 'தூய ஆவியாரே, வாரும். எங்கள் சுயநலன்களை வெற்றிகொள்ள எமக்கு உதவியருளும்'
என தன் டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாய்க்கிழமையன்று செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள். உயிர்ப்புத் திருவிழாவைத் தொடர்ந்துவரும் இந்நாட்களில், தன் மறையுரைகளிலும்,
டுவிட்டர் செய்திகளிலும் தூய ஆவியாரின் கொடைகள் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.