மே 20,2014. அண்டார்டிகா கண்டம் ஒவ்வோர் ஆண்டும் 160 பில்லியன் டன் எடையளவு பனிக்கட்டியை
இழந்துவருவதாக அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அண்டார்டிகா கண்டத்தின்
பனிப்படலம் முழுவதையும் ஆய்வுச்செய்து வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கை, நான்கு ஆண்டுகளுக்கு
முன்பிருந்த நிலையைவிட தற்போது இருமடங்கு பனி உருகுவதாகவும் கூறுகிறது. சில நூறு ஆண்டுகளில்
அண்டார்டிக்காவின் மொத்தப் பனியும் உருகலாம் என்று அஞ்சப்படும் வேளையில், மொத்தப் பனியும்
உருகினால், உலகமெங்கும் கடல்மட்டம் 1 மீட்டருக்கும் அதிகமாக உயர்ந்து பல நாடுகள் பாதிக்கப்படலாம்
என எச்சரிக்கப்பட்டுள்ளது.