மலேரியா நோய்க்கு ஒவ்வொரு நாளும் 1500 குழந்தைகள் பலி
மே,17,2014. மலேரியா நோயால் உலகில் ஒவ்வொரு நாளும் 1500 குழந்தைகள் உயிரிழப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருந்துகளால் தடுக்கவல்ல இந்த நோயால் ஒவ்வொரு நாளும் 1500 குழந்தைகளின் வாழ்வை இழந்துகொண்டிருக்கிறோம்
என கூறும் Catholic Online என்ற செய்தி நிறுவனம், உலகில் ஒவ்வோர் ஆண்டும் 5 இலட்சத்திற்கும்
மேற்பட்ட மக்கள் மலேரியா நோய்க்குப் பலியாவதாகவும் தெரிவிக்கிறது.