2014-05-13 18:07:14

திருத்தந்தை: வாழ்வில் முக்கியமானவை அன்பும் கருணையும்


மே 13,2014. 'ஒவ்வொரு நாளும் ஒரு சிறு பகுதி என நாம் நற்செய்தியை வாசிப்போம். அதன் வழி நம் வாழ்வில் எது முக்கியமானது என்பதை நாம் கற்றுக்கொள்வோம். அவையாவன : அன்பும் கருணையுமாகும்' என இச்செவ்வாய்க்கிழமையன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
ஒவ்வொரு நாளும் 9 மொழிகளில் தன் டுவிட்டர் பக்கத்தில் மக்களுக்கான குறுஞ்செய்திகளை வெளியிட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெரும்பாலும் இறையன்பு, பிறரன்பு, கருணை, ஆகியப் பண்புகளை வளர்க்க அழைப்புவிடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.