2014-05-10 16:20:32

மத்தியக்கிழக்கு கிறிஸ்தவர்களுக்கு உதவ கிறிஸ்தவத் தலைவர்கள் அழைப்பு


மே 10,2014. சிரியா, எகிப்து மற்றும் ஈராக்கில் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் கிறிஸ்தவர்களுக்கு உதவ அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு முன்வரவேண்டும் என கிறிஸ்தவ மதப்பிரதிநிதிகள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர்.
மக்களின் வழிபாட்டுத்தலங்கள், துறவு இல்லங்கள், கல்லறைத்தோட்டம், விவிலிய மையங்கள் என பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் கட்டிடங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதுடன், சிலுவைகள் அகற்றப்படுவதாகவும் அமெரிக்க அரசுக்கு கூட்டறிக்கை ஒன்றை அனுப்பியுள்ள கத்தோலிக்க, கிறிஸ்தவ, மற்றும் ஆர்த்தடாக்ஸ் தலைவர்கள், அனைத்து கிறிஸ்தவர்களும் இஸ்லாம் மறைக்கு மதம் மாற கட்டாயப்படுத்தப் படுவதாகவும் அதில் தெரிவித்துள்ளனர்.
அனைத்துலக அளவிலும் மத விடுதலையை உறுதிசெய்வதோடு, மத்தியகிழக்குப் பகுதியின் சிறுபான்மை மதத்தவரின் பிரச்னைகள் குறித்து ஆராய சிறப்புப் பிரதிநிதி ஒருவரை நியமிக்கவேண்டும் எனவும் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசை விண்ணப்பித்துள்ளனர் கிறிஸ்தவத் தலைவர்கள்.

ஆதாரம் : CWN








All the contents on this site are copyrighted ©.