மதவிவகாரங்களுக்கென தனி காவல் துறைப்பிரிவு துவக்கப்பட இலங்கையில் எதிர்ப்பு
மே 07,2014. மத ரீதியான விவகாரங்களை விசாரிப்பதற்கு சிறப்புக் காவல் பிரிவு உருவாக்க
இலங்கை அரசு திட்டமிட்டுவருவது குறித்து தன் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு
கிறிஸ்தவ மதத்தலைவர்கள். இலங்கையின் சிறுபான்மை மதத்தவர் மீது தாக்குதல்களை நடத்திவரும்
சிங்கள புத்தமத தீவிரக்குழுக்களை பாதுகாக்கவே இத்தகைய ஒரு சிறப்புக் காவல் பிரிவை உருவாக்க
அரசு திட்டமிடுகின்றது என அந்நாட்டின் கத்தோலிக்க மற்றும் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபை
குழுக்கள் குறைகூறியுள்ளன. அரசு இத்தகைய ஓர் ஆலோசனையை முன்வைத்திருப்பதே மதரீதியான
மோதல்கள் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்வதாகும் என்ற கத்தோலிக்க அருட்பணி இம்மானுவேல் செபமாலை,
புத்த மதத்தை ஆதரிக்கும் இலங்கை அரசு, சில புத்த தீவிரவாத அமைப்புகளின் போக்குகளையும்
கண்டுகொள்ளாமல் விடுகிறது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார் .