திருத்தந்தையின் திருப்பயணத்திற்கு தயாரிப்பாக புனித பூமியில் 9 நாள் செப வழிபாடுகள்
மே 07,2014. இம்மாதம் 24 முதல் 26ம் தேதிவரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பூமியில்
திருப்பயணம் மேற்கொள்ளவுள்ளதை முன்னிட்டு அப்பகுதி கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து ஒன்பது
நாள் தயாரிப்பு செபவழிபாட்டை நடத்த உள்ளனர். திருத்தந்தையின் திருப்பயணத்திற்கு ஆன்மீக
முறையில் தங்களைத் தயாரிக்க ஒன்பது நாட்களை செப நாளாக அறிவித்துள்ள புனித பூமியின் கிறிஸ்தவ
சமூகங்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும் Ecumenical கிறிஸ்தவசபை முதுபெரும்
தலைவருக்கும் இடையேயான சந்திப்புக்கும் இச்செப வேண்டுதல் உந்துதலை தருவதாக இருக்கும்
என்றனர். ஜோர்டன், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ராயேலுக்கான திருத்தந்தையின் திருப்பயணம்
துவங்குவதற்கும் முந்தைய 9 நாட்களில், புனித இடங்களில் செபவழிபாடுகள், திருநற்கருணை ஆராதனை,
உண்ணா நோன்பு போன்றவைகளுடன் தயாரிப்புகள் இடம்பெறும் என எருசலேமின் இலத்தீன் ரீதி முதுபெரும்
தலைவரின் அலுவலகம் அறிவித்துள்ளது.