2014-05-06 15:57:46

சூடான் கத்தோலிக்க மருத்துவமனை அரசுப்படைகளால் தாக்கப்பட்டுள்ளதற்கு ஆயர் கண்டனம்


மே 06,2016. போரால் பாதிக்கப்பட்டுள்ள சூடானின் தென்பகுதியிலுள்ள கத்தோலிக்க மருத்துவமனையை சூடான் விமானப்படைத் திட்டமிட்டு தாக்கியுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.
சூடானின் தென்பகுதி Nuba மலைப்பகுதியில் சேவையாற்றிவந்த இரக்கத்தின் மாதா மருத்துவமனையை தாக்கி சேதமாக்கியுள்ளதன் மூலம், சூடான் விமானப்படை, அப்பாவி பொதுமக்களை பழிவாங்கியுள்ளது என்றார் El Obied மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற ஆயர் Macram Max Gassis.
அப்பாவி பொதுமக்களுக்கு பாதுகாப்பளிக்கவேண்டும் என அனைத்துலகச் சட்டம் உரைக்கும்வேளை, கத்தோலிக்க மருத்துவமனையில் உதவிபெற்றுவந்த பொதுமக்களும் இணைந்து தாக்கப்பட்டுள்ளது அடிப்படை மனிதகுல உரிமைகளுக்கு எதிரானது என்றார் ஆயர் Gassis.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.