மத சுதந்திரத்தை மீறுவதாக 15 நாடுகள் மீது அமெரிக்க ஐக்கிய நாடு குற்றச்சாட்டு
மே 03,2014. மதவிடுதலையைப் பொறுத்தவரையில் உலகின் 15 நாடுகள், அவைகளை மீறுவதால் சிறப்புக்
கண்காணிப்புக்கு உட்படவேண்டியவை என பட்டியலை வெளியிட்டுள்ளது அமெரிக்க ஐக்கிய நாட்டு
அரசின் சர்வதேச மத சுதந்திரத்தைக் கண்காணிக்கும் அவை. இன்றைய உலகில் பர்மா, சீனா,
எரிட்டிரியா, ஈரான், வட கொரியா, சவுதி அரேபியா, சூடான், உஸ்பேகிஸ்தான், எகிப்து, ஈராக்,
நைஜீரியா, பாகிஸ்தான், சிரியா, தாஜிக்கிஸ்தான், துர்க்மானிஸ்தான், வியட்நாம் ஆகிய நாடுகளின்
அரசுகள் மக்களின் மதசுதந்திரத்தை மதிக்கத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.