மே02,2014. இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குத்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெகுவாக ஆதரவளிப்பதாக அறிவித்தார் கர்தினால் Jean-Louis
Tauran. அல்ஜீரியாவின் அன்னாபா எனுமிடத்தின் புனித அகுஸ்தினார் பேராலயத்தின் நூற்றாண்டுவிழாக்
கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள திருத்தந்தையின் பிரதிநிதியாக அங்குச் சென்றுள்ள, மதங்களிடையேயான
பேச்சுவார்த்தைகளுக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Tauran, பத்திரிகையாளர்களுக்கு
அளித்தப் பேட்டியில், இந்த பேராலயத்தை மீண்டும் சீரமைக்க உதவிய ஆல்ஜீரிய அரசுக்கு திருத்தந்தை
பிரான்சிஸ் தன் நன்றியை வெளியிடுவதாகவும் கூறினார். அல்ஜீரிய நாட்டில் ஒவ்வொரு பங்குதள
நடவடிக்கைகள் மூலமும் கிறிஸ்தவர்களிடையேயும் இஸ்லாமியர்களிடையேயும் பேச்சுவார்த்தைகளை
ஊக்குவிக்க, மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளுக்கான திருப்பீட அவை ஊக்கமளித்துவருவதாக
மேலும் கூறினார் கர்தினால் Tauran.