திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி. பொருளாதார அவையுடன் திருத்தந்தை சந்திப்பு
மே02,2014. 'தந்தையாம் இறைவனைவிட பொறுமையுடையவர் எவருமில்லை. அவர் அளவிற்கு புரிந்துகொள்பவரும்,
காத்திருக்கத் தெரிந்தவரும் எவருமில்லை' என தன் வெள்ளிக்கிழமை டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். இதே நாளில் அங்கோலா அரசுத்தலைவர் Jose Eduardo dos Santosயையும்
திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், திருப்பீடப்
பொருளாதார நிலைகளை ஆய்வுச் செய்யும் அவை அங்கத்தினர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில்
சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிதி விவகாரங்களில் திருப்பீடம் வெளிப்படையாகவும்,
திறமையாகவும் செயல்பட வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார். திருப்பீட நிர்வாகம்
மேலும் சிறப்புடன் செயல்பட சீர்திருத்தங்களைக் கொணரும் நோக்கில் இந்த பொருளாதார சிறப்பு
அவை உருவாக்கப்பட்டது என்ற திருத்தந்தை, இப்பணியில் திருஅவைக்கான விசுவாசமும் நுண்ணறிவும்
முக்கிய இடம்வகிக்கின்றன என்றார்.