மே 01,2014. மங்கோலியாவில் கம்யூனிச அதிகாரிகளின் கடும் கட்டுப்பாடுகளையும் தாண்டி கத்தோலிக்கர்களின்
எண்ணிக்கை வளர்ச்சியடைந்து வருவதாக தலத்திருஅவை மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது. பல ஆண்டுகளாக
நாத்தீகம் பரப்பப்பட்டுவந்த மங்கோலியாவில் 1992ம் ஆண்டே வெளிநாட்டு மறைபோதகர்கள் நுழைய
முடிந்துள்ள நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. மங்கோலியாவில்
மத சுதந்திரம் சட்டம் மூலம் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அரசு அதிகாரிகளின் போக்குகளால்
பல கட்டுப்பாடுகளை எதிர்நோக்கவேண்டியிருப்பதாக கிறிஸ்தவர்கள் தெரிவித்துள்ளனர். அரசின்
கட்டுப்பாடுகள் ஒருபுறம் இருக்க, கிறிஸ்தவர்கள் உலகாயுதப்போக்குகளுக்கு அடிமையாகி வருவதும்,
கிறிஸ்தவம் புறக்கணிக்கப்படுவதற்கு காரணமாகிறது என்றார் மங்கோலியத் திருஅவை அதிகாரி ஒருவர். கடந்த
வாரம் இயேசுவின் உயிர்ப்புத் திருவிழாவுக்கு முந்தைய நாள் 30 இளையோரும் முதியோரும் இந்நாட்டில்
திருமுழுக்குப் பெற்றது குறிப்பிடத்தக்கது.