2014-04-30 16:57:34

இவ்வார இறுதியில் இலங்கை ஆயர்களின் 'அட் லிமினா' சந்திப்பு


ஏப்.30,2014. 5 ஆண்டிற்கு ஒருமுறை உலகின் ஆயர்கள் உரோம் நகர் வந்து தூய பேதுரு கல்லறையைத் தரிசிப்பதுடன், திருத்தந்தையுடன் கலந்துரையாடும் 'அட் லிமினா' எனும் சந்திப்பை மேமாதம் 2 மற்றும் 3 தேதிகளில் மேற்கொள்ள உள்ளனர் இலங்கை ஆயர்கள்.
கர்தினால் ஆல்ஃபிரட் மால்கம் இரஞ்சித்தின் கீழ் இயங்கும் கொழும்பு உயர் மறைமாவட்டம் மற்றும் 10 மறைமாவட்டங்களைக் கொண்டுள்ள இலங்கையிலிருந்து வரும் ஆயர்களை வெள்ளி, சனி தினங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்து உரையாடுவார்.
70 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோரை புத்த மத்ததினராகவும், 7.1 விழுக்காட்டினரை இந்துக்களாகவும், 7.6 விழுக்காட்டினரை இஸ்லாமியராகவும், 8 முதல் 9 விழுக்காட்டினரை கிறிஸ்தவர்களாகவும் கொண்டுள்ளது இலங்கை.

ஆதாரம் : வத்திக்கான் வானாலி








All the contents on this site are copyrighted ©.