ஏப். 29,2014. 'நான் பாவியில்லை என்று எவரும் கூறமுடியாது. நம் பாவங்களுக்கான மன்னிப்பை
இறைவனிடம் வேண்டுவோம்' என தன் டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாய்க்கிழமையன்று எழுதியுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். மேலும், இச்செவ்வாய்க்கிழமையன்று பராகுவாய் அரசுத்தலைவர்
Horacio Manuel Cartes Jaraவை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ். இதற்கிடையே,
இத்திங்கள் முதல் புதன் வரை திருப்பீடத்தில் இடம்பெறும் எட்டு கர்தினால்கள் அடங்கிய சிறப்பு
அவைக்கூட்டத்திலும் பங்குபெற்றார் திருத்தந்தை. திருஅவையின் நிர்வாக அமைப்பு முறை குறித்து
விவாதிக்க 5 கண்டங்களைச் சேர்ந்த எட்டு கர்தினால்கள் அடங்கிய குழு, திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களால் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டது. இதில் மும்பை கர்தினால் Oswald Graciasம் அங்கம்
வகிக்கிறார்.