உஸ்பேகிஸ்தானில் அரசுக் கல்லறைத் தோட்டத்தில் இஸ்லாமியர் அருகே கிறிஸ்தவர் புதைக்கப்பட
இஸ்லாமிய குரு எதிர்ப்பு
ஏப். 29,2014. மதச் சார்பற்ற நாடான உஸ்பேகிஸ்தானில் இறந்த கிறிஸ்தவர்களின் உடல்கள் இஸ்லாமியர்களின்
கல்லறைகள் அருகே புதைக்கப்படக்கூடாது என, இஸ்லாம் மதத்தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசின்
கீழ் உள்ள பொது கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் அடக்கம் செய்யப்படக்கூடாது என இஸ்லாம் மதத்தலைவர்கள்
கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து அரசும் மௌனம் காக்கிறது என செய்தி நிறுவனங்கள்
அறிவிக்கின்றன. உஸ்பேகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட் அருகே வாழ்ந்துவந்த சில கிறிஸ்தவ
குடும்பங்கள் ஏற்கனவே இஸ்லாமியர்களாக இருந்து கிறிஸ்தவத்திற்கு மாறியவர்கள் என்பதால்,
அவர்களை அரசு பொதுக்கல்லறைகளில் அவர்களின் இஸ்லாமிய உறவினர்களின் கல்லறை அருகே புதைக்க
இஸ்லாமிய மதக்குரு எதிர்ப்பு தெரிவித்திள்ளார். கல்லறைத் தோட்டம் அரசுக்கு சொந்தமானது
எனினும், இஸ்லாமியர் அருகே பிறமதத்தினர் புதைக்கப்படுவதற்கு ஷாரியா சட்டம் இடமளிக்காது
என்றார் அப்பகுதி இஸ்லாமிய குரு. உஸ்பேகிஸ்தான் நாட்டில் 88 விழுக்காட்டினர் இஸ்லாமியர்,
எட்டு விழுக்காடினர் கிறிஸ்தவர்.