இரண்டாயிரம் கிலோமீட்டரை நடந்தேக் கடந்த திருப்பயணிகள்
ஏப். 29,2014. திருத்தந்தை 2ம் ஜான் பால் புனிதராக அறிவிக்கப்பட்டத் திருப்பலியில் கலந்துகொள்ள
போலந்திலிருந்து உரோம் நகர் வரை 22 பேர் ஓடியே வந்தடைந்துள்ளனர். இரண்டாயிரம் கிலோமீட்டர்
தூரத்தை கால்நடையாகவே கடக்கும் நோக்குடன் ஒவ்வொருநாளும் 300 கிலோமீட்டர்கள் ஓடி உரோம்
நகரை வந்தடைந்ததை, இறைவனுக்கு நன்றி செலுத்தும் ஒரு செயலாகக் கருதுவதாக இத்திருப்பயணிகள்
தெரிவித்தனர். நல்லவராக, கடவுளின் மனிதராக இருந்து, உலகில், குறிப்பாக ஐரோப்பாவிலும்
போலந்திலும் பெரும் மாற்றத்தைக் கொணர்ந்த புதிய புனிதர் இரண்டாம் ஜான் பாலுக்காக இறைவனுக்கு
நன்றி செலுத்த 2000 கிலோமீட்டரை கால்நடையாகவே கடந்து வந்ததாக இக்குழு தெரிவித்தது.