பாலஸ்தீன பிரிவினைவாத குழுக்களிடையே அமைதி உடன்பாடு குறித்து கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சி
ஏப்,28,2014. பாலஸ்தீன தேசிய அதிகாரத்தைக் கையில் கொண்டிருக்கும் Fatah அமைப்பிற்கும்,
Gaza Strip பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் Hamas இஸ்லாமிய தீவிரவாதக் குழுவிற்கும்
இடையே அமைதி உடன்பாடு ஏற்ப்பட்டுள்ளது குறித்து தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்
அப்பகுதி கிறிஸ்தவர்கள். பாலஸ்தீனிய கிறிஸ்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும்,
அதைவிட மேலாக Gaza Strip பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சி கொண்டுள்ளதாகவும்
கூறினார், எருசலேம் காரித்தாஸ் இயக்குனர் அருட்பணியாளர் Raed Abusahlia. தற்போது பாலஸ்தீனப்
பிரிவினைவாத குழுக்களிடையே இடம்பெற்றுள்ள அமைதி உடன்பாடு, நிலையான ஒரு தீர்வுக்கு இட்டுச்
செல்லும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார் அருட்பணி Abusahlia.