2014-04-28 16:45:08

திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி - இஸ்பானிய மன்னருடன் திருத்தந்தை சந்திப்பு


ஏப்,28,2014. 'சரிநிகரற்ற நிலையே அனைத்துச் சமூகத் தீமைகளுக்கும் மூலகாரணமாக அமைந்துள்ளது' என தன் டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
மேலும், இத்திங்களன்று காலை திருப்பீடத்தில், இஸ்பானிய மன்னர் முதலாம் ஹுவான் கார்லோஸ் மற்றும் அரசி சோபியா ஆகியோரை சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதற்கிடையே, பங்களாதேசின் டாக்கா உயர்மறைமாவட்ட துணை ஆயர் Theotonius Gomes அவர்கள், முதுமை காரணமாக பணி ஓய்வு பெறுவதை இத்திங்களன்று ஏற்றுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.