2014-04-26 16:37:30

புனிதர் பட்டமளிப்பு விழாத் திருப்பலியில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், மற்றும், 91 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்


ஏப்.26,2014. ஏப்ரல் 27, இஞ்ஞாயிறு உரோம் நேரம் காலை 10 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் புனிதர் பட்டமளிப்பு விழாத் திருப்பலியில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், 150 கர்தினால்கள், மற்றும் 700க்கும் மேற்பட்ட ஆயர்களும், கலந்துகொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புனித பேதுரு வளாகத்தில் பாடகள் குழு, காலை எட்டு மணி முதல், பக்திப் பாடல்களை இசைக்கத் துவங்குவர். ஒன்பது மணியளவில், இறை இரக்கத்திற்கான செபவழிபாடு இடம்பெறும். 9.30 மணிக்கு பேராலய மணிகள் ஒலிக்கத் துவங்கும். 9.45 மணி முதல், திருத்தந்தை திருப்பலி மேடைக்கு வரும்வரை புனிதர்கள் மன்றாட்டு பாடப்படும்.
இதற்கிடையே, திருத்தந்தையர்கள் 23ம் ஜான் மற்றும் 2ம் ஜான்பால் ஆகியோரின் புனிதர் பட்டமளிப்பு விழா திருப்பலியில் பங்கேற்க, 91 நாடுகள் தங்கள் பிரதிநிதிகள் குழுவை அனுப்பத் தீர்மானித்துள்ளன என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள் பணியாளர் ஃபெதெரிகொ லொம்பார்தி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.