திருத்தந்தையின் டுவிட்டர் - நான்கு நாட்டு தலைவர்களுடன் திருத்தந்தை சந்திப்பு
ஏப். 26,2014. 'சமூகநீதி மற்றும் ஏழைகள் மீதான நம் அக்கறையிலிருந்து நமக்கு விலக்கு
வழங்கப்பட்டுள்ளது என எவரும் எண்ண முடியாது' என இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் பக்கத்தில்
எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் மேலும், இச்சனிக்கிழமையன்று காலை, Honduras
அரசுத்தலைவர் Juan Orlando Hernández Alvarado, பெல்ஜியம் மன்னர் இரண்டாம் ஆல்பர்ட்,
அரசி பவுலா, உக்ரைன் பிரதமர் Arseniy Yatsenyuk, போலந்து அரசுத்தலைவர் Bronislaw Komorowski
ஆகியோரை திருப்பீடத்தில் தனித்தனியாக சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.