2014-04-26 16:52:46

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் திருத்தந்தை 2ம் ஜான்பால் திருஉருவச் சிலை திறப்பு


ஏப்.26,2014. திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் திருஉருவச் சிலை ஒன்று இச்சனிக்கிழமை மாலை ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் அமைந்துள்ள செபமாலை மாதா கோவிலில் கல்தேய வழிபாட்டு முதுபெரும் தந்தை பேராயர் Louis Raphael Sako அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
ஈராக் நாட்டின் தேர்தலையொட்டி, விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், உரோம் நகரில் நடைபெறும் புனிதர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள முடியாத நிலையில் உள்ள முதுபெரும் தந்தை, பேராயர் Sako அவர்கள், இஞ்ஞாயிறன்று புனிதராகவிருக்கும் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் திரு உருவச் சிலையைத் திறந்து வைத்தார்.
புனிதர்களாக அறிவிக்கப்படவிருக்கும் திருத்தந்தையர்களின் நினைவாக, பல்வேறு வழிபாட்டுக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் என்றும் பேராயர் Sako அவர்கள் தெரிவித்தார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.