2014-04-26 16:54:40

இலங்கை பொதுபல சேனாவின் குற்றச்சாட்டை நிராகரித்தார் மன்னார் ஆயர்


ஏப். 26,2014. இலங்கையின் மன்னார் மற்றும் யாழ்ப்பாண ஆயர்கள் தேசத்துரோகக் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என அந்நாட்டின் பொதுபலசேனா அமைப்பு முன்வைத்துள்ள குற்றச்சாட்டு அர்த்தமற்றது என நிராகரித்துள்ளார் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்.
பொதுபலசேனா அமைப்பு எல்லா விடயங்களிலும் தேவையின்றித் தலையிட்டுக்கொண்டிருக்கிறது என பி.பி.சி. தமிழோசை ஒலிபரப்பிற்கு பேட்டியளித்த மன்னார் ஆயர் அவர்கள், நாட்டுப் பிரச்சனைகள் அனைவருக்கும் சொந்தமானவை, அதைவிடுத்து, சிங்களம் பேசுபவர்களுக்கும் அதிலும் புத்தமதத்தினருக்குமே அவை சொந்தம் எனக்கூறுவது மனிதத்தன்மைக்கு ஒவ்வாதது என மேலும் உரைத்தார்.
சமயம் வேறு, சமூகம் வேறு என பார்க்காது செயல்படும் கத்தோலிக்கத் திருஅவை, அரசியலில் மக்களுக்கு சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு வழிகாட்டவேண்டிய கடமையை உணர்ந்துள்ளது என மேலும் கூறிய மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், பொது அரசியலில் ஈடுபடலாமே தவிர, கட்சி அரசியலில் தாங்கள் ஈடுபடுவதில்லை என்றார்.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.