ஏப். 26,2014. ஒவ்வோர் ஆண்டும் உலகில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மலேரியா நோய்க்குப்
பலியாவதாகவும், இதில் 75 விழுக்காட்டினர் ஆப்பிரிக்கக் குழந்தைகள் எனவும் தெரிவிக்கிறது
அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று. 30 வினாடிகளுக்கு ஒருவரைப் பலிவாங்கும் மலேரியா
நோயைக் கட்டுப்படுத்தவும், ஒழிக்கவும் முடியும் எனக்கூறும் MSF எனப்படும் 'எல்லைகளற்ற
மருத்துவம்' என்ற குழு, நாட்டில் 2000க்கும் மேற்பட்ட நலப்பணியாளர்களுடன் விழிப்புணர்வுத்
திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அறிவித்தது.